Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'அம்மா ரிலீஸ்'.. திரையுலகினர் கொண்டாட்டம்... படப்பிடிப்பில் பட்டாசு வெடித்த சரத்குமார்!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய செய்தி வெளியானதும் தமிழ் சினிமா உலகமே இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த செய்தி வெளியானதிலிருந்து, திரையுலகின் அனைத்து அமைப்பினரும் ஒருவருக்கொருவர் செய்தியை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.
திரைப் பிரபலங்கள் பலரும் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் சந்தோஷத்தை தெரிவித்தனர்.
இந்த செய்தி வெளியானபோது நடிகர் சரத்குமார் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தார். செய்தி அறிந்ததும், யூனிட்டுக்கே பட்டாசு பண்டல்களை வரவழைத்து வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
'படக்குழுவினருக்கு இனிப்பு வழங்கினார். இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுபட்டு தமிழகத்தின் நிரந்தர முதல்வராகத் திகழ்வார் அம்மா' என்று தெரிவித்தார் சரத்குமார்.