கடைசியில நீங்களும் பேய் சீஸனுக்குள் வந்துட்டீங்களே எழில்?
பேய் சீஸனில் ஆஜரான எழில் கடைசியில் அந்த சீஸனுக்குள் விழுந்தே விட்டார் இயக்குநர் எழில்.
இயக்குநர் எழிலின் இரண்டாவது இன்னிங்ஸ் மனம் கொத்திப் பறவை மூலம் ஸ்டார்ட் ஆனது. அதன் பின் தேசிங்கு ராஜா முதல் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வரை எழில் தொட்டதெல்லாம் ஹிட் தான். மினிமம் பட்ஜெட்டில் கலகல எண்டெர்டெய்னர்களை கொடுத்து வரும் எழில் இப்போது உதயநிதியை வைத்து சரவணன் இருக்க பயமேன் படத்தை இயக்கி வருகிறார். இது வழக்கம்போல காமெடிக் களம்தான் என்றாலும் ஹாரர் காமெடியாம்.

வே.வ.வெள்ளக்காரன் படத்தில் சின்ன போர்ஷனில் பேயைப் பயன்படுத்தியவர் இதில் படம் முழுக்க பேயை வைத்தே கதை சொல்லப்போகிறாராம். உதயநிதியை ஒருதலையாக காதலித்து ஏமாறும் சிருஷ்டி டாங்கே பேயாக வந்து பயமுறுத்துவதைத் தான் காமெடியாக சொல்லியிருக்கிறாராம் எழில்.
Comments


Click it and Unblock the Notifications