Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'பணத்தைக் கேட்டா ராஜஸ்தானுக்கு ஓடிரு என மிரட்டினார்' - இயக்குநர் மீது ஃபைனான்சியர் மோசடி புகார்!
Recommended Video
சென்னை : இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது சினிமா ஃபைனான்சியர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் மோசடி புகார் கொடுத்துள்ளார். சக்தி சிதம்பரம் தன்னை மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள்ளார் அந்த ஃபைனான்சியர்.
சத்யராஜ் நடித்த 'கோவை பிரதர்ஸ்', 'மகா நடிகன்', 'இங்கிலீஸ்காரன்' ஆகிய படங்கள் உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் டைரக்டர் சக்தி சிதம்பரம். பிரபு மற்றும் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'சார்லி சாப்ளின்' இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்.
'சார்லி சாப்ளின்' இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடிக்கிறார். நடிகை அடா ஷர்மா நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சக்தி சிதம்பரம் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.
சக்தி சிதம்பரம் இயக்கிய 'ஜெயிக்கிற குதிர' படம் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் சினிமா ஃபைனான்சியர் பியாரிலால் ஜெயின், சக்தி சிதம்பரம் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பியாரிலால் அளித்துள்ள புகார் மனுவில், 'ஜெயிக்கிற குதிர' படத்தை நான்தான் முதலில் தயாரித்தேன். இதற்காக 47 லட்சம் செலவு செய்தேன். பிறகு படத்தின் தயாரிப்பு உரிமத்தை சக்தி சிதம்பரம் பெற்றுக் கொண்டு எனது பணத்தை திருப்பித் தருவதாக கூறி 10 லட்சம் தந்தார்.
தனக்குத் தரவேண்டிய மீதி பணத்தைத் தராமல் ஏமாற்றி வருவதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டால், குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு ஓடிவிடு என மிரட்டுவதாகவும் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக விசாரித்த போலீஸார், தயாரிப்பாளர் சங்கத்தில் பேசித் தீர்த்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளனர்.