ஜீவிதா, ராஜசேகருக்கு ரூ. 500 அபராதம்!

By Sudha

Jeevitha and Rajasekhar
கோர்ட் அனுப்பிய சம்மனுக்குப் பதிலளிக்காத நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி நடிகை ஜீவிதாவுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆந்திராவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 9வது மாஜிஸ்திரேட் கோர்ட் சமீபத்தில் ஜீவிதா, ராஜசேகருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. சிரஞ்சீவியின் கண் மற்றும் ரத்த வங்கி குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரையும் நேரில் ஆஜராகுமாறு கூறி ஜீவிதா, ராஜசேகருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இருவரும் வரவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் 27ம் தேதி இருவருக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்து, நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து நேற்று ஜீவிதாவும், ராஜசேகரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். ரூ. 500 அபராதத்தைக் கட்டினர். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X