Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஊ சொல்றியா நடன இயக்குநர்மீது பாலியல் புகார்... 2 ஆண்டுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு!
மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநராக உள்ளார் கணேஷ் ஆச்சார்யா. குண்டாக இருந்தாலும் இவரது நடன அசைவுகள் அனாயாசமாக இருக்கும். இந்திய அளவில் முக்கியமான பல படங்களில் இவர் நடனம் அமைத்துள்ளார்.
“ஊ
சொல்றியா
மாமா“
சமந்தாவின்
நடன
ஒத்திகை…
ரிப்பீட்மோடில்
பார்க்கும்
ரசிகர்கள்
!

முன்னணி நடன இயக்குநர்
பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் கணேஷ் ஆச்சார்யா. பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநராக இவர் இருக்கிறார். குண்டாக இருந்தாலும் இவரது நடன அசைவுகள் அநாயாசமாக இருக்கும்.

ஊ சொல்றியா நடன இயக்குநர்
சமீபத்தில் அல்லு அர்ஜூன், சமந்தா இணைந்து நடனமாடி இந்திய அளவில் கவனத்தை பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இவர் நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2020ல் இவர்மீது உடன் பணிபுரிந்த டான்சர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாருக்கு தற்போது காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

டான்சர் பாலியல் புகார்
தன்னிடம் கணேஷ் ஆச்சார்யா பாலியல் அத்துமீறியதாகவும் வற்புறுத்தி ஃபோர்ன் படங்களை பார்க்க வைத்ததாகவும் அந்த டான்சர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது கணேஷ் ஆச்சார்யா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் புகாரை அவர் மறுத்த நிலையில் தற்போது எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை.

ஆதரவு கருத்து
கணேஷ் ஆச்சார்யா மீது அந்த டான்சர் புகார் அளித்தபோது அவருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். நடிகை தனுஸ்ரீ தத்தாவும் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரையடுத்து கடந்த 2020ல் இந்தியன் பிலிம் அண்ட் டெலிவிஷன் கோரியோகிராபர் அசோஷியேஷனில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

பதவி பறிப்பு
அப்போது அவர் இந்த சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கணேஷ் ஆச்சார்யா மீது தற்போது புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடுமையான சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.