நடிகர் சூர்யாவின் புது வீட்டில் தீ விபத்து

Fire accident in Actor Surya's home
சென்னை: நடிகர் சூர்யா தியாகராய நகரில் கட்டி வரும் புதிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின் உடனடி நடவடிக்கையால் உரிய நேரத்தில் தீ அணைக்கப் பட்டு பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. பிரபல நடிகரான இவரது மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களே.

நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். தனது பெற்றோர் மற்றும் தம்பி குடும்பத்தார் என அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழும் வகையில் அந்த வீடு கட்டப் பட்டு வருகிறது.

அந்த வீட்டிற்கான கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்குவதற்கென புதிய கட்டிடம் அருகிலேயே ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன.

எதிர்பாராத விதமாக அந்தக் கூரையில் தீ பிடித்தது. உடனடியாக அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள்.

அதற்குள் தகவல் அறிந்து விரைந்து வந்த தியாகராயநகர் தீயணைப்பு படையினர் தீ விபத்துக் குறித்து விசாரணை நடத்தினார்கள். யாரோ கட்டிடப் பணியாள் குடித்து விட்டு வீசிய சிகரெட் துண்டே தீவிபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப் படுகிறது.

எனினும், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X