Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சூர்யாவின் புது வீட்டில் தீ விபத்து
நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. பிரபல நடிகரான இவரது மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களே.
நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். தனது பெற்றோர் மற்றும் தம்பி குடும்பத்தார் என அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழும் வகையில் அந்த வீடு கட்டப் பட்டு வருகிறது.
அந்த வீட்டிற்கான கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்குவதற்கென புதிய கட்டிடம் அருகிலேயே ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன.
எதிர்பாராத விதமாக அந்தக் கூரையில் தீ பிடித்தது. உடனடியாக அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள்.
அதற்குள் தகவல் அறிந்து விரைந்து வந்த தியாகராயநகர் தீயணைப்பு படையினர் தீ விபத்துக் குறித்து விசாரணை நடத்தினார்கள். யாரோ கட்டிடப் பணியாள் குடித்து விட்டு வீசிய சிகரெட் துண்டே தீவிபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப் படுகிறது.
எனினும், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.