Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதுச்சேரிவாசிகளே ச்சியர்ஸ்... உங்களுக்கு முதல் மல்டிப்ளெக்ஸ் திறந்தாச்சு!
புதுவை: புதுச்சேரியில் முதல் முதலாக ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டரைத் திறந்துள்ளது சத்யம் சினிமாஸ். இந்த மாலுக்கு தி சினிமா என்று பெயரிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தனது திரையரங்குகளை விரிவுபடுத்தி வருகிறது சத்யம் சினிமாஸின் எஸ்பிஐ சினிமா.
சென்னையில் சத்யம், எஸ்கேப், பேலஸோ, எஸ்2, எஸ்2 தியாகராஜா போன்ற மல்டிப்ளெக்ஸ்களை இயக்கி வரும் எஸ்பிஐ, கோவை, பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களில் தனது திரையரங்குகளைத் திறந்துள்ளது.
புதுவையில் கடலூர் சாலையில் உள்ள புராவிடன்ஸ் மாலில் 5 திரைகள் கொண்ட அதிநவீன தி சினிமாவைத் திறந்துள்ளது எஸ்பிஐ சினிமா.
இந்தத் திரையரங்கை புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
"புதுவை சினிமா விரும்பிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தி சினிமா தரும் என்று நம்புகிறோம். திரைகளின் தரம், ஒலித் துல்லியம், நல்ல உணவு என அனைத்துமே தரமாகக் கிடைக்கும். 4கே புரொஜக்ஷன் வசதி உள்ளது. 3டி வசதியும் உள்ளது," என்று தெரிவித்தார் எஸ்பிஐ சினிமாஸின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி.