5 இயக்குனர்கள் நடிகர்களாக களமிறங்கி மிரட்ட வரும் 'பொன் மகள் வந்தாள்'!
சென்னை: தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக 5 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் படம் 'பொன் மகள் வந்தாள்'.
Recommended Video
நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக இருக்கும் இப்படம் ரிலீஸிற்கு முன்பாகவே அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் என தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களாக வலம் வந்த ஜாம்பவான்கள் நடித்துள்ளனர்.

இந்திய சினிமா மற்றும் தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே ஐந்து இயக்குனர்கள் நடிகர்களாக இணைந்திருப்பது இதுவே முதல் முறை.
தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வந்த படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ள ஜோதிகா, இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் 'பொன் மகள் வந்தாள்' திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். உலகம் முழுவதிலும் 200 நாடுகளில் அமேசான் ப்ரைம் மூலம் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் இதுவேயாகும். மே 29 முதல் அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள் திரைப்படம் ரிலீஸாகிறது.
இதனிடையே நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் நாளை அமேஸான் லைவ்வில் ரசிகர்களுடன் உரையாட உள்ளனர்.


Click it and Unblock the Notifications











