பிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்!

By

சென்னை: நடிகை நயன்தாரா தமிழில் முதன் முதலாக அறிமுகமாக இருந்த படம், நடிகர் தனுஷால் தள்ளிப் போனது.

சாதாரண ஒருவரை நட்சத்திரம் ஆக்குவதும் ஒரு நட்சத்திரத்தைச் சாதாரண ஒருவராக்குவதும் சினிமா செய்யும் மாயம்.

அந்த மாயத்தை, ஒரு புறம் கடின உழைப்பு என்றும் மறுபுறம் அதிர்ஷ்டம் என்றும் சொல்கிறார்கள், சினிமாவில்.

லேடி சூப்பர்ஸ்டார்

லேடி சூப்பர்ஸ்டார்

ஆனால், இந்த இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் ஆனதற்கு! அவர் தமிழில் அறிமுகமான படம், ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த 'ஐயா' என்றாலும் அறிமுகமாக இருந்த படம் வேறு. டயானா மரியம் குரியன், நயன்தாரா என்று மாறி சத்யன் அந்திகாடின் 'மனசினக்கரே' மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தார், மலையாளத்தில்.

மோகன்லால்

மோகன்லால்

இந்தப் படத்தில் ஜெயராம் ஹீரோ. இந்தப் பட ஹிட்டுக்கு பிறகு மோகன்லாலின் விஷ்மயாதும்பத்து என்ற படத்தில் நடித்தார். பாசில் இயக்கிய இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த வாய்ப்பு வந்தது நயன்தாராவுக்கு. மலையாளப் படங்களின் ஷூட்டிங் இரவு பகலாக நடக்கும் அப்போது. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முடித்து விடுவார்கள்.

நயன்தாரா போட்டோ

நயன்தாரா போட்டோ

15, 20 நாளில் ஒரு படம் முடிந்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது மலையாளப் பத்திரிகை ஒன்றில் வந்த நயன்தாராவின் போட்டோவை பார்த்து தமிழில் நடிக்க வைக்க பேசிக் கொண்டிருந்தார்கள். மறைந்த ஆர்ட்டிஸ்ட் மானேஜர் அஜித் இதற்காக நடிகை நயன்தாராவிடம் பேசினார். (அவர்தான் நயன்தாராவுக்கு பல வருடங்களாக மானேஜராக இருந்தவர்).

வர முடியுமா?

வர முடியுமா?

இவர் அப்போது சில மலையாள நடிகைகளுக்கு மானேஜராக இருந்தவர். ஒரு மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாராவிடம், உடனே கிளம்பி வர முடியுமா? என்றார் அஜித். முடியும் என்ற நடிகை நயன்தாராவுக்கு அன்று இரவு 9 மணி வரை ஷூட்டிங். தவித்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் தமிழ் சினிமாவில் நடித்தால் பெரிய இடத்துக்கு செல்லலாம்.

அம்மாவும் அப்பாவும்

அம்மாவும் அப்பாவும்

மறுநாள் சென்னையில் ஆடிஷன். காலையில் சென்னையில் இருக்க வேண்டும். ஒருவழியாக ஷூட்டிங் முடிந்தது. ஃபிளைட் பிடித்து வரும் நிலையில் அப்போது நயன்தாரா இல்லை. கேரளாவில் இருந்து பஸ் பிடித்தார் நயன். கூட அவர் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள், கோயம்பேடுக்கு. வந்ததுமே, குளித்து முடித்துவிட்டு ஆடிஷனுக்கு சென்றார்.

அக்கா மாதிரி

அக்கா மாதிரி

தூக்கக் கலக்கத்துடனேயே கலந்துகொண்டார் ஆடிஷனில். அந்த ஹீரோவுடன் நயன்தாரா நடிக்கும் காட்சிகளை எடுத்துப் பார்த்தார்கள். பிறகு நீண்ட யோசனைக்குப் பிறகு அந்த ஹீரோ, வேண்டாம் என்றார், நயன்தாராவை. அவர் அதற்கு சொன்ன காரணம். 'எனக்கு பொருத்தமா அவங்க இல்லை'. அப்போது கொஞ்சம் பூசினாற்போல் இருப்பார் நயன். அவரை ரிஜெக்ட் செய்த அந்த ஹீரோ, தனுஷ். அந்தப் படம், சுள்ளான்!

Recommended Video

Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu
சினிமா செய்யும் மாயம்

சினிமா செய்யும் மாயம்

நயன்தாராவை நிராகரித்த இதே தனுஷ்தான், பிறகு அவர் நடித்து சூப்பர் ஹிட்டான 'யாரடி நீ மோகினி' படத்துக்காக அவர் கால்ஷீட்டுக்கு காத்திருந்தார் என்பது தனிக்கதை. அதனால்தான், சாதாரண ஒருவரை நட்சத்திரம் ஆக்குவதும் ஒரு நட்சத்திரத்தைச் சாதாரண ஒருவராக்குவதும் சினிமா செய்யும் மாயம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X