Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினிக்கு தான் என்ன பணிவு, என்ன பணிவு: சச்சின் டெண்டுல்கர்
டெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பணிவை பார்த்து அசந்து போய்விட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
என்டிடிவி தனது 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது 25 கிரேட்டஸ்ட் இந்தியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. இந்த 25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் விருது பெற்றவர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 25 பேருக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.
ரஜினி
25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் விருது விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி பிரணாப் கையால் விருது வாங்கினார்.
சச்சின்
விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் சச்சின் டெண்டுல்கரிடம் சென்று அவரிடம் பேசினார்.
பணிவு
ரஜினி என்னிடம் வந்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது பணிவை பார்த்து அப்படியே அசந்து போய்விட்டேன். எனது பாராட்டுக்குரிய நபர் அவர் என்று நெகிழ்ந்தார் சச்சின்.
கிரிக்கெட்
ரஜினிகாந்த் கிரிக்கெட் பார்ப்பார் என்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி உள்பட பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் பற்றி பேசினோம் என்றார் சச்சின்.