Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினிக்கு தான் என்ன பணிவு, என்ன பணிவு: சச்சின் டெண்டுல்கர்
டெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பணிவை பார்த்து அசந்து போய்விட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
என்டிடிவி தனது 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது 25 கிரேட்டஸ்ட் இந்தியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. இந்த 25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் விருது பெற்றவர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 25 பேருக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.
ரஜினி
25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் விருது விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி பிரணாப் கையால் விருது வாங்கினார்.
சச்சின்
விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் சச்சின் டெண்டுல்கரிடம் சென்று அவரிடம் பேசினார்.
பணிவு
ரஜினி என்னிடம் வந்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது பணிவை பார்த்து அப்படியே அசந்து போய்விட்டேன். எனது பாராட்டுக்குரிய நபர் அவர் என்று நெகிழ்ந்தார் சச்சின்.
கிரிக்கெட்
ரஜினிகாந்த் கிரிக்கெட் பார்ப்பார் என்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி உள்பட பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் பற்றி பேசினோம் என்றார் சச்சின்.