Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஊரடங்கால் நிகழ்ச்சிகள் ரத்து.. எங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள்
சென்னை: நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் சங்கத்தினர் நலத்திட்ட உதவிகளை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் வரும் 14ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க மக்கள் கூட்டம் சேரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கோவில் திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை நம்பியுள்ள நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் ஆலோசகரான பேராசிரியர் காளிஸ்வரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, ஏற்கனே புயல், மற்றும் தேர்தல் காரணமாக நாட்டுப்புற கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவித்தது போன்று நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்களுக்கும் உதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று வீடியோ வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.