Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஊரடங்கால் நிகழ்ச்சிகள் ரத்து.. எங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள்
சென்னை: நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் சங்கத்தினர் நலத்திட்ட உதவிகளை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் வரும் 14ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க மக்கள் கூட்டம் சேரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கோவில் திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை நம்பியுள்ள நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் ஆலோசகரான பேராசிரியர் காளிஸ்வரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது, ஏற்கனே புயல், மற்றும் தேர்தல் காரணமாக நாட்டுப்புற கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவித்தது போன்று நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்களுக்கும் உதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று வீடியோ வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.