Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கார்த்தி படத்தில் நடித்த கிராமிய பாடகர் மரணம்: அதிர்ச்சியில் மனைவியும் உயிர் இழந்தார்
விருதுநகர்: பருத்திவீரன் படத்தில் நடித்த கிராமிய பாடகர் பாண்டி மரணம் அடைந்துள்ளார். அவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.
கார்த்தி நடித்த பருத்திவீரன், மாட்டுத்தாவணி மற்றும் வெண்ணிலா கபடிக்குழு ஆகிய படங்களில் நடித்துள்ளவர் கிராமிய பாடகர் பாண்டி(55). விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர்.
அப்பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்ற பாண்டி நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியபோது காரியாபட்டி நெடுங்குளம் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகே அவர் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
உடனே பாண்டியின் உடலை வீட்டிற்கு தூக்கி வந்தனர். பாண்டியின் உடலை பார்த்த அவரது மனைவி பச்சையம்மாள் கதறி அழுதபோது நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார்.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார். இதையடுத்து கணவன், மனைவியின் உடல்களை ஒன்றாக வைத்து எரியூட்டினர்.
பாண்டி, பச்சையம்மாள் மரணத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.