Don't Miss!
- News மோடி, அமித் ஷா மேடை மேடையாக பேசியதை! ஒரே பேச்சில் புரட்டி போட்ட ப்ரியங்கா! காங்கிரஸின் மாஸ்டர்பிளான்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக கென்யாவில் உருவான ஜல்லிக்கட்டு திரைப்படம்!
தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்று கென்யாவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்று கென்யாவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குர் சந்தோஷ் கோபல் இயக்கும் படம் ஜல்லிக்கட்டு. கென்யாவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன.
முதல் முறையாக, ஒரு தென்னிந்திய படம் கென்யா மற்றும் குறிப்பாக மாசாய் மாரா பழங்குடி மக்களின் மத்தியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் உள்ள மசாய் பழங்குடியினர்கள், பழங்கால வாழ்க்கை தற்போதும் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
மேலும் அவர்களது தனித்துவமான வாழ்க்கைமுறையையும் தொடர்கின்றனர். எந்த தொழில்நுட்ப வசதியையை பெறாத அவர்கள் இன்னும் அவர்கள் கால்நடை மற்றும் இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கும் மாசாய் பழங்குடி மக்கள் மற்றும் அவர்களின் கால்நடைகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 15 நாட்களுக்கும் மேலாக அவர்களுடன் தங்கி அவர்களின் பாரம்பரியத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கால்நடைகளின் டி.என்.ஏவும் காங்கேயம் காளைகளின் டிஎன்ஏவும் ஒத்து போவதாகவும் அவர்கள் கூறினர்.