Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த காரணங்களுக்காக ’வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்க்கலாம்
நீண்ட ஆண்டுகளுக்குப்பின் கவுதம் மேனன் சிம்பு இணையும் வெந்து தணிந்தது காடு படம் நாளை அதிகாலை 4:30 மணிக்கு வெளியாகிறது.
சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை திரையரங்குகளில் ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
இது காதல் படம் என்பதைத்தாண்டி நாயகன், டான் வரிசைப்படமாக இருக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
மன்மதன், வல்லவன் ரூட்டில் சிம்பு எடுத்த புது முடிவு: டபுள் டமாக்கா சர்ப்ரைஸ்க்கு ரசிகர்கள் ரெடியா?
நாளை வெளியாகும் வெந்து தணிந்தது காடு
சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வரும் நாளை (செப். 15) வெளியாகும் நிலையில், படத்திற்கான முன்பதிவு அனைத்து மையங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநாடு வெற்றி, கவுதம் மேனன் இயக்கம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வம் அதிகரித்துள்ளது எனலாம். சிம்புவுக்கு என இருக்கும் ரசிகர் கூட்டம், சிம்பு கவுதம் மேனன் காம்பினேஷனில் நீண்ட காலத்துக்கு பின் வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
19 வயது முதல் தாதா வரை பயணம் செய்யும் சிம்பு ரோல்
இப்படத்தின் தணிக்கை முடிந்து யு/ஏ பெற்றுள்ளது, ஒரு தனித்துவமான கதையாக இருக்கும் என்பது படத்தின் டிரெய்லர் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார், மேலும் படம் மும்பைக்குச் செல்லும் ஒரு இளைஞனின் பயணத்தைப் பற்றி பேசுகிறது. இப்படத்தில் சிலம்பரசன் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். 19 வயது இளைஞன் முதல் வயது வந்த தாதா வரை அவரது ரோல் உள்ளது. சிம்பு போன்ற திறமையான நடிகர் ஒரு மல்டி ஆக்ஷன் ரோலில் நடிப்பது இதுவரை சிம்புவுக்கு கிடைக்காத ஒரு அங்கிகாரமாக இப்படம் இருக்க வாய்ப்புள்ளது.
புதுமுகம் வேண்டாம் சிம்புதான் வேண்டும்-கௌதம் மேனன்
முதலில் ஒரு புதுமுகத்தை இப்படத்தில் நடிக்க வைப்பதாக இருந்ததாகவும், ஆனால் இயக்குனர் கௌதம் மேனன் இந்த பாத்திரத்தை சிம்பு செய்தால் நன்றாக இருக்கும் என சிம்பு மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை சிம்புவுக்கு வழங்க காரணமாக அமைந்தது. ஏற்கெனவே சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தில் அலட்டல் இல்லாமல் கேங்க்ஸ்டராக நடித்திருப்பார். அதேப்போன்று இந்தப்படத்திலும் அப்பாப்வி இளைஞன் எப்படி மாறுகிறார் என்பது போன்ற வித்தியாசமான சிம்பு இதுவரை செய்யாத பாத்திரம். இருவரும் தங்கள் மூன்றாவது படத்தில் இணைந்துள்ளனர்.
புதிய நாயகி இலங்கையைச் சேர்ந்தவர் நாயகனுக்கு இணையான வேடம்
இலங்கையைச் சேர்ந்த நடிகை சித்தி இத்னானி தமிழில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் அறிமுகமாகிறார், சிலம்பரசனுக்கு ஜோடியாக அவர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கிறதாம். அழகான நடிகை, புதுமுகம் சிம்புவுக்கு இணையாக நடிப்பார் என தெரிகிறது. படம் வெளி வருவதற்கு முன்னரே மேலும் அவர் தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்.
மெருகூட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை
தமிழில் முதல் ஆறு மாதம் அனிருத் என்றால் அடுத்த ஆறுமாதம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படங்கள் வெளியாகிறது. அதில் வெந்து தணிந்தது காடு படமும் ஒன்று. ஒரு மனிதனின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் படம் நகர்வதால் படத்தின் பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சிம்பு ரசிகர்களை கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'
ஜெயமோகனே பாராட்டி விட்டாரே
பொன்னியின் செல்வன் திரைக்கதை ஆக்கத்தில் பங்கு வகித்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வெந்து தணிந்தது காடு படத்திற்காக இயக்குநர் கௌதம் மேனனுக்கு படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் திரைக்கதையை உருவாக்க உதவியுள்ளார். நுணுக்கமான எழுத்தாளரான இவரது எழுத்தாற்றலுக்கு எப்போதும் தமிழகத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர் இப்படத்தில் இணைந்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. ஜெயமோகன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் வித்தியாசமானவர்கள் என்பதால் இருவரது இணைப்பும் புதிய எதிர்பார்ப்பை படத்தின் மீது ஏற்பட்டுத்தியுள்ளது.