பொது இடத்தில் இப்படியா நடப்பது?: ராணா, பிபாஷாவை பார்த்து வியந்த ரசிகர்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட முன்னாள் காதலர்களான ராணாவும், பிபாஷா பாசுவும் பார்த்தும் பார்க்காதது போன்று முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார்களாம்.
தெலுங்கு நடிகர் ராணாவின் பெயர் சில நடிகைகளுடன் அடிபட்டது. அதில் த்ரிஷாவுடன் தான் அவர் பெயர் அடிக்கடி அடிபட்டது. தம் மாரோ தம் படத்தில் நடிக்கும்போது ராணாவும், பிபாஷா பாசுவும் காதலித்ததாக கூறப்பட்டது.
அந்த காதல் துவங்கிய வேகத்தில் முறிந்துவிட்டதாம்.

ஹைதராபாத்
ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிபாஷா மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்தார். அந்த நிகழ்ச்சியில் அவரின் முன்னாள் காதலர் ராணா கலந்து கொள்வார் என்பது பிபாஷாவுக்கு தெரியாது.

பிபாஷா
நிகழ்ச்சிக்கு வந்த ராணா பிபாஷாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தும் பார்க்காதது போன்று முகத்தை திருப்பிக் கொண்டிருந்தனர்.

ராணா
ராணாவும், பிபாஷாவும் பழசை மறந்து குறைந்தபட்சம் பொது இடம் என்பதற்காகவாவது ஒரு ஹலோ சொல்லி சிரிப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

காதல் முறிவு
பிபாஷா பாசு ராணாவை ரொம்ப சின்சியராக காதலித்தாராம். அப்படி இருந்தபோது ராணா காதலை முறித்துக் கொண்டதால் மிகுந்த மன வேதனைக்கு ஆளானாராம் பிபாஷா.


Click it and Unblock the Notifications











