Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதிய முடிவோடு சினிமாவுக்கே திரும்பி வரும் ரம்யா: எல்லாமே அதுக்காகத்தானாம்
பெங்களூரு: தென்னிந்திய திரையுலகில் ரொம்பவே பிரபலமானவர் நடிகை ரம்யா.
முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்யா, அரசியலிலும் காங்கிரஸ் எம்பியாக பெரிய ரவுண்டு வந்தார்.
இந்நிலையில், நடிகை ரம்யா மீண்டும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் அறிமுகம்
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 'அபி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கன்னடத்தில் ஆகாஷ், கௌரம்மா, ஜோதே ஜோதியாளி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடத்தில் இருந்து தமிழுக்கும் அறிமுகமான ரம்யாவின் முதல் படமாக 'குத்து' அமைந்தது. இந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக க்ளாமரில் கலக்கியிருப்பார் ரம்யா. அதனால் குத்து ரம்யா என்றே அழைக்கப்பட்டார்.
தமிழில் கலக்கிய ரம்யா
'குத்து' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ரம்யாவுக்கு தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் வாய்ப்புகள் தேடிச் சென்றன. அர்ஜுனுடன் கிரி, தனுஷுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் என கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தார். திவ்யா ஸ்பந்தனா, ரம்யா, குத்து ரம்யா என இவருக்கு பல அடையாளங்கள் இருந்தன. நடிகையாக மட்டும் இருந்துவிடாமல் அரசியலிலும் களமிறங்கினார் ரம்யா.
மாண்டியா எம்பியாக என்ட்ரி
சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே 2012ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சினிமாவில் க்ளாமரில் அதிரடி காட்டியதைப் போல அரசியலிலும் பல அதிரடிகளை அரங்கேற்றினார். அதனால், 2013ல் மாண்டியா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆனார். ஆனாலும், அடுத்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
6 ஆண்டுகளுக்குப் பின்னர் சினிமாவில்
2014 தேர்தலில் தோல்வியடைந்ததும் ரம்யாவுக்கு அரசியலில் ஆர்வம் குறைந்தது. இதனால் சில வருடங்களாக சினிமா, அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் அறிமுகமாகிறார் ரம்யா. தனது 'ஆப்பிள் பாக்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் 2 படங்களைத் தயாரித்து வருகிறார். மேலும், ஓடிடி தளங்களுக்காக வெப் சீரிஸ்களையும் தயாரிக்க உள்ளாராம். அதோடு நடிகையாக ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.