Don't Miss!
- News
எப்போ கல்யாணம்.. பொண்ணு எப்படி இருக்கணும்? பட்டுனு வந்த கேள்வி! யோசிக்காமல் சட்டுனு பதிலளித்த ராகுல்
- Finance
10 மாதம் தான் ஆச்சு.. அதற்குள்ள வேலை போச்சு.. என்ன செய்யுறது.. 60 நாட்களுக்குள் வேலை கிடைக்குமா?
- Lifestyle
பெற்றோர்களே! நீங்க உங்க குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் விதம் அவங்க வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ரசிகர்கள் கொண்டாடும் பொன்மனச் செம்மல்.. எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை : நடிகரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி அதிமுக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நடிகராகவும் நாடக கலைஞராகவும் ரசிகர்களை கவர்ந்த எம்ஜிஆர் தமிழக முதலமைச்சராகவும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
1952
ஆம்
ஆண்டு
எம்ஜிஆரின்
2
படங்களை
வீழ்த்தி
வந்த
பராசக்தி..சுவையான
புதுத்தகவல்கள்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்
நடிகர், நாடகக் கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர், முதலமைச்சர் என பன்முகத் திறமையுடன் காணப்பட்டவர் எம்ஜிஆர். 1936ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை இவரது திரையுலகப் பயணம் தொடர்ந்தது. சதி லீலாவதி என்ற படத்தில் சிறிய வேடத்தில் தன்னுடைய அறிமுகத்தை துவங்கிய எம்ஜிஆர் தொடர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார்.

வில்லனாக மிரட்டிய எம்ஜிஆர்
கடந்த 1941ம் ஆண்டில் தியாகராஜ பாகவதருடன் இணைந்து அசோக்குமார் என்ற படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார் எம்ஜிஆர். இதேபோல பியு சின்னப்பாவுடன் கடந்த 1944ம் ஆண்டில் ஹரிச்சந்திரா என்ற படத்திலும் நடித்துள்ளார். அதற்கு அடுத்த ஆண்டிலேயே சாலிவாகனன் என்ற படத்தில் வில்லனாகவும் மிரட்டியுள்ளார்.

எம்ஜிஆர் நாயகனாக என்ட்ரி கொடுத்த படம்
எம்ஜிஆர்
நாயகனாக
களமிறங்கிய
படம்
ராஜகுமாரி.
இந்தப்
படம்
1947ம்
ஆண்டில்
ஜூபிடர்
பிக்சர்ஸ்
தயாரிப்பில்
வெளியானது.
தொடர்ந்து
இரண்டாவது
கதாநாயகன்,
கதாநாயகன்
என
தன்னுடைய
திரையுலகப்
பயணத்தை
அமைத்துக்
கொண்டார்
எம்ஜிஆர்.
ராஜகுமாரிக்கு
பிறகு
தனியாக
ஹீரோவாக
எம்ஜிஆர்
நடித்த
படம்
மருதநாட்டு
இளவரசி.
இந்தப்
படத்தை
ஏ.
காசிலிங்கம்
இயக்கியிருந்தார்.

சிவாஜியுடன் இணைந்த எம்ஜிஆர்
கடந்த
1954ம்
ஆண்டில்
வெளியான
கூண்டுக்கிளி
என்ற
படத்தில்
சிவாஜி
கணேசனுடன்
இணைந்து
நடித்துள்ளார்
எம்ஜிஆர்.
இந்தப்
படத்தை
டிஆர்
ராமண்ணா
இயக்கியிருந்தார்.
சிவாஜியுடன்
எம்ஜிஆர்
இணைந்து
நடித்துள்ள
ஒரே
படம்
இது.
தொடர்ந்து
டிஆர்
ராமண்ணா
இயக்கத்தில்
அடுத்த
ஆண்டிலேயே
குலேபகாவலி
என்ற
படத்தில்
நடித்தார்
எம்ஜிஆர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம்
டிஆர் சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ஈஸ்ட்மேன் கலர் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இந்தப் படம் கடந்த 1956ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியானது. தொடர்ந்து மதுரை வீரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்கள்
தொடர்ந்து எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், கலங்கரை விளக்கம், அன்பே வா, நான் ஆணையிட்டால், நாடோடி, விவசாயி என தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் எம்ஜிஆர். ரிக்ஷா காரன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களும் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்களாக அமைந்தன.

இயக்குநராக எம்ஜிஆர்
இந்தப் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த எம்ஜிஆர், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளார். இதனிடையே இன்றைய தினம் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள், தொண்டர்கள் அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.