துவங்கிய வேகத்தில் முடியும் ப்ரியங்கா சோப்ரா திருமண வாழ்க்கை: என்ன காரணம் தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் பிரிய 4 காரணங்கள் கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஜோத்பூர் அரண்மனையில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை ரூ. 18 கோடிக்கு வாங்கியது ஒரு பிரபல பத்திரிகை.

ப்ரியங்கா
ஊரே பார்த்து வியக்கும்படி நடந்த ப்ரியங்காவின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடியப் போகிறது. ப்ரியங்கா, நிக் ஜோனஸ் இடையே பிரச்சனை ஏற்பட்டு எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

பிரிவு
ப்ரியங்காவின் மறுமுகம் திருமணத்திற்கு பிறகு தான் நிக்கிற்கு தெரிய வந்ததாம். அவர் சொன்னபடி தான் நிக் நடக்க வேண்டும் என்று நினைக்கிறராம் ப்ரியங்கா. இது நிக் ஜோனஸுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

பிரச்சனை
காதலித்தபோது சிரித்த முகமாக இருந்த ப்ரியங்கா திருமணத்தின் போதில் இருந்து சிடுசிடுவென இருக்கிறாராம். அவருக்கு இவ்வளவு கோபம் வரும் என்பதே நிக்கிற்கு லேட்டாக தான் தெரிந்துள்ளது. பெண்ணுக்கு இந்த அளவுக்கு கோபம் ஆகாது என்று நிக்கின் பெற்றோர் பயப்படுகிறார்களாம்.

ஜாலி
ப்ரியங்கா ஓவராக செலவு செய்கிறாராம். அவர் செலவு செய்யும் விதம் நிக் ஜோனஸுக்கு பிடிக்கவில்லையாம். எப்பொழுது பார்த்தாலும் ஜாலியாக பார்ட்டி பண்ணிக் கொண்டிருக்க ஆசைப்படுகிறாராம் ப்ரியங்கா. இந்த பொண்ணு குடும்பத்திற்கு ஒத்து வராது என்று நிக்கிடம் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











