Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லைக் போடுற பிரெண்ட் இல்ல.. லைஃப் கொடுக்குற பிரெண்ட்.. டிரெண்டாகும் சீறு வசனம்!
Recommended Video
சென்னை: ஃபேஸ்புக்குல லைக் போடுற பிரெண்ட் இல்ல, லைஃப் கொடுக்குற பிரெண்ட் சீறு படத்தின் வெற்றியை தீர்மானித்த வசனம்.
கடந்த வாரம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்துள்ள படம் தான் சீறு. ஜீவா ,ரியா சுமன்,காயத்ரி கிருஷ்ணா,நவ்தீப்,வருண்,சதீஷ் மற்றும் சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் தயாரித்து இருந்தார். டி.இமான் படத்திற்கு இசையமைத்து இருந்தார் .
நடிகர் ஜீவாவிற்கு சிறந்த வெற்றிபடமாக அமைந்திருக்கிறது இந்த சீறு படம் . ஜீவா இதுவரையில் நடிக்காத தங்கை சென்டிமென்ட் மற்றும் நட்பு பற்றிய காட்சிகளில் இந்த படத்தில் நடித்து இருந்தார் .
இந்த படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும்,ஃபேஸ்புக்குல லைக் போடுற பிரெண்ட் இல்ல லைப் கொடுக்குற பிரெண்ட் என்று. இந்த ஒரு வசனம் தான் படத்தின் கதையை தீர்மானித்து இருக்கிறது .
படத்தின் திரைக்கதையும் இதன் அடிப்படையிலே உருவாக்கபட்டிருக்கிறது . படத்தின் ஆரம்பத்தில் நாயகன் ஜீவாவை கொல்ல வரும் வருண் அவர் தங்கையின் உயிரை காப்பாற்றுகிறார். மேலும் இதன்பின் தான் கதை தடம்புரண்டு மாறுகிறது .
அதுவரை வருணை தான் ரசிகர்கள் வில்லனாக பார்த்து வந்தனர். அதன்பின் தனக்கு உதவி செய்த வருணுக்கு உதவி செய்ய தயாராகுகிறார் ஜீவா . அங்கிருந்து கதை எப்படி சென்றது ஜீவா செய்த உதவி அவருக்கு உதவியதா என்பது தான் கதை .
தற்போது நண்பர்கள் பலர் எப்படியிருக்கிறார்கள், ஆனால் எப்படியிருக்க வேண்டும் என்பதை படம் போன வேகத்திலே பேசி செல்கிறது. சில அழுத்தமான வசனங்கள் நட்பை பற்றிய காட்சிகளை மிக ஆழமாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்து இருக்கிறது .
ஜீவா அடுத்ததாக களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் 83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த்தாக நடித்து இருக்கிறார். 1983ல் எவ்வாறு இந்திய அணி உலககோப்பையை வென்றது எனும் வரலாற்றை படமாக்கியுள்ளனர்.