Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படத்தயாரிப்பாளர் ஆகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்
இளம் இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் வெற்றிகரமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகனும் ஆவர். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் புரொடக்ஷன்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் படம் தயாரிக்க இருக்கிறார்.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்ரம் சுகுமார் இயக்கும் படத்தை முதன் முதலில் தயாரிக்கிறார். 'ஆடுகளம்' படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார் விக்ரம் சுகுமார். அவர் கூறிய கதை பிடித்துப் போகவே தானே தயாரிக்க களம் இறங்கிவிட்டார் பிரகாஷ்குமார்.
படத்தயாரிப்பு பற்றி கூறிய பிரகாஷ்குமார், ''படம் தயாரிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேறும் என நினைக்கவில்லை. இந்த கதையை கேட்டதும் நானே தயாரிக்க முடிவு செய்தேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எனது அசிஸ்டென்ட் ஒருவர் இசை அமைக்கிறார்'' என்றார்.
இசை அமைப்பாளர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்துவரும் நிலையில் பிரகாஷ்குமார் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.