Don't Miss!
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 லட்ச ரூபாய் பெட்டியுடன் கேபிரியல்லா வெளியேறியுள்ளார்.
இன்னும் 2 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய போகிறது.
இந்நிலையில், நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டது. 6 போட்டியாளர்களில் யார் அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு செல்லப் போகிறார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், கேபி அதை கைப்பற்றினார்.
ரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா?
சம்பிரதாய சாம்பிராணி
வெளியேறிய போட்டியாளர்கள் இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டன. முதலில் வந்த ஒரு லட்சம் ரூபாயை யாருமே எடுக்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த தேவையில்லாத ஆணியை சம்பிரதாயத்துக்கு வைத்து விட்டு, பின்னர் 5 லட்சம் ரூபாயை வைத்தனர்.
பாலா எடுப்பார்
5 லட்சம் பெட்டியுடன் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார் என்றே வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. ஏகப்பட்ட நெட்டிசன்களும் பாலா தான் அந்த பணத்திற்கு ஆசைப்படுவார் என்றும் அன்பு கேங்கும் உள்ளே வந்து பாலாவை நல்லாவே பயமுறுத்துவதும் அதற்காகத்தான் எனக் கூறி வந்தனர்.
பணம் தேவையில்லை
ஆனால், பாலாஜி முருகதாஸ் மற்றவர்கள் நினைத்தது போல பணத்தை தூசாகவே மதிக்கல.. இந்த வாரமும் இரண்டாவதாக நம்மை சேவ் செய்திருக்கிறார்கள் என கணக்குப் போட்ட பாலா, ஆரிக்கு டைட்டில் கிடைத்தாலும் நமக்கு ரன்னர் அப்பாவது கிடைக்கும் என எண்ணிக் கொண்டு, ரசிகர்களின் அன்பு போதும் பணம் தேவையில்லை என அதை எடுக்காமல் ஓட்டுக்களை அள்ளி வருகிறார்.
பெட்டியை தூக்கிய கேபி
இந்த சீசனில் இந்த பணத்தை யார் எடுக்கப் போகிறார் என ரசிகர்களும், உள்ளே உள்ள போட்டியாளர்களும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வந்த மகாலக்ஷ்மியை கை நழுவ விட்டு விடக் கூடாது என நினைத்த கேபி, சட்டென அதன் அருகே சென்று பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.
ஓவர் சீன் ரியோ
கேபி அந்த பணப்பெட்டியை தூக்கியதும், அவர் அருகே வந்த ரியோ, அந்த பணத்தை வை கேபி என்றார். இதுவரை ரியோவுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றி வந்த கேபி, ரியோவின் பேச்சை கேட்க முடியாது என மறுத்தார். கேபியை விட்டில் இருந்து நிறுத்தி வைக்க அந்த பெட்டி எனக்கு வேண்டும் நான் வீட்டுக்குப் போகணும்னு ரொம்பவே ஓவர் சீன் போட்டது அவரது ரசிகர்களையே கடுப்பாக்கி இருக்கும்.
பத்து லட்சத்துக்கு ஆசையா
5 லட்சம் பணத்தை வைத்து யாருமே எடுக்காமல் இருந்தால், அடுத்தது பத்து லட்சம் ரூபாய் பணம் வைக்கப்படும். எல்லோரும் அதற்காகத்தான் வெயிட் பண்ணுவார்கள், இதை எடுக்க மாட்டார்கள், என நினைத்தே கேபி அந்த 5 லட்சப் பெட்டியை உஷாராக எடுத்துக் கொண்டார். கேபி அந்த பெட்டியை வை நான் எடுத்துக்கப் போறேன் என ரியோ தொடர்ந்து அலம்பல் செய்ததை பார்த்த நெட்டிசன்கள் பத்து லட்சத்துக்கு ரியோ ஆசைப்பட்டார். ஆனால், கேபி செம சூப்பரா ரியோவுக்கு ஆப்பு வச்சிடுச்சு என கலாய்த்து வருகின்றனர்.
அசிங்கப்படுத்திய கேபி
தொடர்ந்து அந்த 5 லட்ச ரூபாய் பெட்டியை வைத்து விடு கேபி நான் எடுக்க மாட்டேன். அடுத்து பத்து லட்சம் வரும் நீயே எடுத்துட்டுப் போ என ரியோ பேசிய போதும், அதை வச்சா நீ எடுத்துப்ப என ரியோவிடமும், தனியாக ஆறுதல் சொன்ன சோமிடமும், அதை வச்சா அவன் எடுத்துப்பான் என சொல்லி ரியோவை கேபி அசிங்கப்படுத்தி விட்டார் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
அசையாத அர்ச்சனா
கேபி பணப்பெட்டியை எடுத்ததை பார்த்த அர்ச்சனா, அவரை தடுக்கவே இல்லை அப்படியே அசையாமல் இருந்தார். எப்படியோ கேபிக்கு டைட்டில் கிடைக்காது, இதையாவது எடுத்துட்டுப் போகட்டும், ரியோவுக்குத்தான் டைட்டில் கிடைக்கப் போகுதே என சந்தோஷத்தில் இருந்தார். ரியோ எடுக்கப் போகிறேன் என சொன்னதும், அப்படியே ஆளே மாறி ரியோவை திட்ட ஆரம்பித்தார்.
ரியோவை திட்டிய நிஷா
நீ செஞ்சது எங்கேயாவது சரியா இருக்கா என ரியோவை உண்மையாகவே திட்டியது நிஷா தான். கேபி எடுக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு, நீ போடுற சீன் தாங்கல, உன்னை நம்பி ஓட்டுப் போடுற ரசிகர்களையும் சேர்த்து அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு என நிஷா ரியோவை விளாசினார்.
அதுக்கு இல்லை
கேபியிடம் இருந்து பணப்பெட்டியை வாங்க ரியோ ராஜ் ஆசைப்படவில்லை என்றும், கேபி வெளியேறுவதை தடுத்து நிறுத்தவே அப்படி பேசினார் என்றும், கேபி மீது ரியோவுக்கு அந்த அளவுக்கு நம்பிக்கையும் பாசமும் உள்ளது என ரியோவின் ரசிகர்கள் அவர் செய்த செயலை பாராட்டி வருகின்றனர்.
கேபி வெளியேற்றம்
சனம் ஷெட்டி கடைசி வரை கேபி அருகே நின்று, பெட்டியை எடுக்காத வெயிட் பண்ணு, நல்லா யோசி என ஆறுதல் கூறினார். ரம்யா பாண்டியன், இது தான் உன் முடிவு என்றால், அது சரியாகவே இருக்கும் என விடை கொடுத்தார். பாலா, ஏன் இப்படி பண்ற, இன்னும் மூணு நாள் தான இரு என்றார். ஆனால், தனது முடிவில் மாறாது நின்ற கேபி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.