Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நிலையில்லா வாழ்கையிது.. கானா பாலாவின் புதிய ஆல்பம்..!
சென்னை : கானா பாலா தானே எழுதி ஒரு பாடலை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
ஆறு அடி வீடு என்ற ஆல்பத்தை தற்போது உருவாக்கியுள்ள கானா பாலா. அதில் இறப்பு பற்றியும் இந்த வாழ்கை எவ்வளவு நிலையில்லாதது என்பதையும் சோக கானா பாடலாக பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு தன் நண்பர் கமலநாதனுடன் இணைந்து வரிகளும் அமைத்துள்ளார்.
இந்த பாடலில் வாழ்கை நிலையில்லா காத்தாடி போல நூல் அறுந்தால் நாம் வானத்தில் பறந்துவிடுவோம் என்ற வரிகளிலிருந்து ஆரம்பிக்கிறது பின்னர் வாழ்கை எந்த மாதிரியான சந்தோஷங்களை கொண்டிருந்தாலும் நமக்கு இறுதியில் இருப்பது வெறும் ஆறு அடி வீடு என்பதை தனது குரலின் மூலம் பாடியிருக்கிறார்.
கானா பாலா சினிமாக்களில் சந்தோசம், சோகம், காதல் தோல்வி, இறப்பு போன்ற பலவித கானாக்களை பாடியிருக்கிறார். 2007ல் சில சிறிய வாய்ப்புகள் மூலம் திரையுலகில் பாட ஆரம்பித்தவர் பின் அட்டகத்தி படத்தின் 'ஆடி போனா ஆவணி' பாடலின் மூலம் பெரும் புகழை அடைந்தார் அன்றிலிருந்து இன்று வரை சினிமாக்களில் பல கானா பாடல்களை பாடி வருகிறார் .
கானாபாலா பாடகரை தாண்டி தனது இயல்பு வாழ்விலும் புரட்சிகரமான பல விஷயங்களை செய்து வருகிறார். தனது வாழ்விடத்தை சுற்றி பயிலும் ஏழை மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மாணவர்களுக்கு படிப்பு செலவுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
கானா பாலா மக்களுகான பல கருத்து மிகுந்த பாடல்களை கானா வடிவில் தனது குரலில் பாடி வருகிறார். இந்த பாடல்கள் அனைத்திலும் தானே வரிகளும் எழுதிவருகிறார். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் ஆறு அடி வீடு பாடல் தற்போதைய நிலையை எடுத்துரைத்தும் வாழ்கை நிலையில்லாதது என்பதை வலியுறுத்தியும் அமைந்திருக்கிறது.