Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சம்பாதிச்சது போதுங்க... இனி புதியவர்கள் வரட்டும்! - கானா பாலா
வருமான விஷயத்தில் போதும் என்று சொல்லும் மனசு அத்தனை சுலபத்தில் யாருக்கும் வந்துவிடுவதில்லை.
ஆனால் கானா பாலா சம்பாதிச்ச வரைக்கும் போதும் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.
'பதினோரு பேரு ஆட்டம்...' என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. 'அட்டகத்தி' படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா ஆவணி...', ‘நடுகடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா...' பாடல்கள் இவரை முன்னணி பாடகராக்கின. சில படங்களில் அவரே தோன்றி நடிக்கவும் நடனமாடவும் செய்கிறார்.
கானா பாலா இதுவரை 75 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். நிறைய பேருக்கு சத்தமில்லாமல் உதவியும் வருகிறார் பாலா.
இப்போது கானா பாடல்கள் எழுதுவதை, பாடுவதை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.
ஏன் இந்த முடிவு?
கானா பாலா சொல்கிறார்:
"நிறைய பாடல்கள் பாடிவிட்டேன். நான் நன்றாக சம்பாதித்தும்விட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின், முன்னேற்றத்திற்காக பாடல்கள் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து வருகிறேன். எனக்காகவே வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன்," என்றார்.