சினிமாவில் ஓராண்டு மட்டுமே பாடுவேன்: கானா பாலா திடீர் அறிவிப்பு
சென்னை: சினிமாவில் ஓராண்டு மட்டுமே பாடுவேன் என்று நடிகர் கானா பாலா திடீர் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிறகு படம் மூலம் பாடகர் மற்றும் நடிகர் ஆனவர் கானா பாலா. கானா பாடல்கள் பாடுவதில் வல்லவர். அஜீத்தின் என்னை அறிந்தால், சூப்பர் ஸ்டாரின் கபாலி உள்பட ஏராளமான படங்களில் பாடியுள்ளார்.

சில படங்களில் பாடிக் கொண்டே நடித்தும் உள்ளார். வழக்கறிஞரான பாலா பாடலும் எழுதுவார். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நிலையில் அவர் இன்று திடீர் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
சினிமாவில் ஓராண்டு மட்டுமே பாடுவேன் என திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவருடைய இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.
கானா பாலாவின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications