Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குதிரையைத் தாக்கிய பாஜக எம்எல்ஏவைத் தண்டிக்க வேண்டும்- ஹேமமாலினி
மும்பை: குதிரையின் காலை உடைத்த பாஜக எம்எல்ஏ தண்டிக்கப்பட வேண்டும் என நடிகை ஹேமமாலினி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில், தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை வந்திருந்தது. போராட்டத்தில் கணேஷ் ஜோஷி போலீசின் லத்தியைப் பறித்து குதிரை ஒன்றின் காலை உடைப்பது போல வீடியோக்கள் வெளியாகின.
இதையடுத்து, பிராணிகள் வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளில் கணேஷ் ஜோஷி மீது டேராடூன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கணேஷ் ஜோஷிக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை ஹேமமாலினியும் கணேஷ் ஜோஷிக்கு எதிராக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
I can't believe anyone can do ths to an innocent animal! It's inhuman & shld be condemned. Thk God it has survived! pic.twitter.com/s7g2QJVBFB
— Hema Malini (@dreamgirlhema) March 16, 2016
இது குறித்து அவர் " என்னால் நம்பவே முடியவில்லை. யாராவது ஒரு அப்பாவி விலங்கிடம் இப்படி நடந்து கொள்வார்களா?
உண்மையிலேயே இது ஒரு மனிதாபிமானமற்ற செயல். நல்லவேளை குதிரை பிழைத்துக் கொண்டது. குதிரையின் காலை துண்டிக்கவும் தேவையில்லை.
I'm told there is no need for amputation.Ths was a real danger for the poor animal!God is indeed merciful.But the culprit has to be punished
— Hema Malini (@dreamgirlhema) March 16, 2016
கடவுள் உண்மையிலேயே கருணை காட்டிவிட்டார். ஆனால் அந்தக் குற்றவாளி உண்மையில் தண்டிக்கப்பட வேண்டும்" இவ்வாறு ஹேமமாலினி காட்டமாக தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் குதிரையை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு நிரூபிக்கப்பட்டால், தனது கால்களை வெட்டி எடுத்துக்கொள்ளுமாறும், கணேஷ் ஜோஷி பேட்டியளித்திருக்கிறார்.