கலாம் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்- கங்கை அமரன்

By Shankar

திரைத்துறையினர் உருவாக்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் ஆவணப் படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும் என்று கங்கை அமரன் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காந்தி கண்ணதாசன், ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Gangai Amaran's request on Kalam documentary

பின்னர் கங்கை அமரன் கூறுகையில், "இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக சிந்தித்து மாணவர்கள், இளைஞர்களை லட்சிய கனவு மூலம் உயர்த்த பாடுபட்ட மாமனிதர் அப்துல் கலாம். உலக நாடுகளின் பிரச்சனைக்கு அறிவுரை வழங்கிய அவர் உலக ஜோதியாக உருவாகி உள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்' என்ற பாடல் அப்துல்கலாம் பெயரை உச்சரிக்கும். இது அவருக்கு பொருத்தமான பாடலாக அமைந்துள்ளது. அவர் மறையவில்லை. நம்மிடம்தான் உள்ளார்.

அவரது லட்சிய பயணத்தை தொடர லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கலாம் கனவை விதைக்க திரைப்படத்துறையினர் ஆவணப்படம் உருவாக்கி வருகின்றனர். அதை இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்ப மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X