Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கலாம் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்- கங்கை அமரன்
திரைத்துறையினர் உருவாக்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் ஆவணப் படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும் என்று கங்கை அமரன் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் இசை அமைப்பாளர் கங்கை அமரன், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காந்தி கண்ணதாசன், ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் கங்கை அமரன் கூறுகையில், "இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக சிந்தித்து மாணவர்கள், இளைஞர்களை லட்சிய கனவு மூலம் உயர்த்த பாடுபட்ட மாமனிதர் அப்துல் கலாம். உலக நாடுகளின் பிரச்சனைக்கு அறிவுரை வழங்கிய அவர் உலக ஜோதியாக உருவாகி உள்ளார்.
கவிஞர் கண்ணதாசனின் 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்' என்ற பாடல் அப்துல்கலாம் பெயரை உச்சரிக்கும். இது அவருக்கு பொருத்தமான பாடலாக அமைந்துள்ளது. அவர் மறையவில்லை. நம்மிடம்தான் உள்ளார்.
அவரது லட்சிய பயணத்தை தொடர லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் உறுதி எடுத்துள்ளார்கள். கலாம் கனவை விதைக்க திரைப்படத்துறையினர் ஆவணப்படம் உருவாக்கி வருகின்றனர். அதை இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்ப மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.