Don't Miss!
- News லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நான் ஏன் சூப்பர் ஸ்டாரைப் போய்ப் பார்த்தேன் தெரியுமா? - கங்கை அமரன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று சந்தித்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார் கங்கை அமரன்.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் இன்று திடீரென ரஜினிகாந்தைச் சந்தித்து, அந்த சந்திப்பு குறித்த படங்களையும் வெளியிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து கங்கை அமரன் கூறுகையில், "எனது நீண்ட கால நண்பர் ரஜினி. நான் தேர்தலில் போட்டியிடுவதையறிந்த ரஜினி, உடனே எனக்கு போனில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிலிருந்து எனக்கு இன்று அழைப்பு வந்தது. பிரசார இடைவெளியில் அவரை இன்று சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னை அன்போடு வரவேற்ற ரஜினி, கட்டியணைத்துக் கொண்டார். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்தோம்.
ஆன்மிகத்திலிருந்து அரசியல் பிரவேசம் வரை பேசினோம். அப்போது, 'உங்களை மாதிரியான நபர்கள் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்று ரஜினி தெரிவித்தார். ரஜினியின் வாழ்த்துகளை ராகவேந்திராவின் வார்த்தையாக கருதுகிறேன்," என்றார்.