Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
எப்படியாவது மீண்டு மீண்டும் வருவார் என்று நம்பியிருந்தேன்… எஸ்.ஜே.சூர்யா இரங்கல் !
சென்னை : கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
டிவிட்டரில் இணைந்த இயக்குநர் பாலா.. முதல் டிவிட்டே யாருக்குன்னு பாருங்க!
இந்நிலையில் நேற்றிரவு இரவு சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69.
இசையமைப்பாளர்
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இவரும் பல திரைப்படங்களுக்கு ஒரு இசை அமைத்துள்ளார்.திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வந்துள்ளார்.
இயக்குனர்
இவரது மகன்கள் வெங்கட் பிரபு, நடிகர் மற்றும் இயக்குனராக உள்ளார். அதே போன்று இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
நேற்றிரவு உயிரிழந்தார்
இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை ( வயது 69) . உடலநலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 11 :30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
இரங்கல்
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அம்மா நமக்கு எவ்வளவு "பலம்". பல நேரங்களில் அப்பாவுக்கும் நமக்கும் "பாலம்". உங்களுக்கு அம்மா எவ்வளவு பலம் என்பதறிவேன். உணர்வால் அம்மாவோடு மிகவும் பிணைக்கப்பட்டவர் என்பதை கடந்த ஒருவாரமாகப் பார்த்து வருகிறேன். எப்படியாவது மீண்டு மீண்டும் வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன் என தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.