இளையராஜா பற்றி கங்கை அமரன் எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: இளையராஜாவை அவரின் தம்பி கங்கை அமரன் வசைபாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடந்த விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு பேசினார். இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று அவர் பேசினார்.
இது குறித்த செய்தியை பார்த்த அவரின் தம்பி கங்கை அமரன் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
கங்கை அமரன்
இளையராஜா பேசியதை பார்த்த கங்கை அமரன், தன்னால் மீண்டும் இசையமைக்க வர முடியாது என்று ட்வீட் செய்துள்ளார். பிரச்சனையே அந்த ட்வீட்டால் தான்.
கலாய்
கங்கை அமரன் தனது அண்ணனை கலாய்ப்பதாக நெட்டிசன்கள் புரிந்து கொண்டுள்ளனர். அந்த காரணத்தால் அவரை பலரும் விளாசியுள்ளனர். அண்ணன் பேச்சை ஒருபோதும் கேட்பது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இளையராஜா
இளையராஜா பற்றி கங்கை அமரன் ட்வீட்டியதை பார்த்து அவர் ஆணவத்தில் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பதில்
கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் திருவாரூல இடைதேர்தல்ல பாஜக சார்பா வாசிக்கனுமாம் வரியா... என்று கேட்க அவரோ ஒங்க வீட்லயும் ஒரு கச்சேரி வச்சுக்கலாம் ... இலவசம் என்று பதில் அளித்துள்ளார்.
குசும்பு
கங்கை அமரன் தன்னை கலாய்த்து ட்வீட் போட்டவருக்கு அவர் பாணியிலேயே பதில் அளித்துள்ளார்.
தம்பி
நெட்டிசன் ஒருவர் ஒழுங்காக கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் அளித்துள்ளார் கங்கை அமரன்.


Click it and Unblock the Notifications











