Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மும்பையை மிரட்டிய பெண் தாதா.. 'கங்குபாய்' பயோபிக் படத்துக்கு எதிர்ப்பு.. வழக்குத் தொடர்ந்த மகன்!
மும்பை: பிரபல நடிகை நடித்துள்ள, பயோபிக் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பிரபல இந்தி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தயாரித்து இயக்கும் படம், கங்குபாய் கத்தியாவாதி.
பயோபிக் படமான இதில் இந்தி நடிகை ஆலியா பட், டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.
பிரியங்கா சோப்ரா
சாந்தனு மகேஸ்வரி, இம்ரான் ஹாஸ்மி, அஜய் தேவ்கன் உட்பட பலர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இதில் முதலில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. அவர் ஹாலிவுட் படங்களில் பிசியாகிவிட்டதை அடுத்து, ஹீரோயின் மாற்றப்பட்டார். இப்போது பிரபல நடிகை ஆலியா பட் நடிக்கிறார்.
கங்குபாய் கொத்தேவாலி
இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. மும்பை அருகில் உள்ள காமத்திபுராவில் 60 களில் கொடிகட்டி பறந்தவர், கங்குபாய் கத்தியாவாதி. பாலியல் தொழில், போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை என நிழல் உலகத் தொடர்புகளுடன் செல்வாக்காக வாழ்ந்தவர் அவர்.
மாஃபியா குயின்ஸ்
பிறகு பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுத்தவர். அவரைப் பற்றி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஹூசைன் ஜைதி என்பவர், 'மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை' என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தி உள்ளார்.
ஜக்குபாய் கதை
இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் கங்குபாய் கத்தியாவாதி வாழ்க்கை கதை சினிமாவாகிறது. அந்த கேரக்டரில் ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கங்குபாயின் மகன் பாபுஜி ராவ்ஜி ஷா இந்தப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவதூறாக இருக்கிறது
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலி, ஹீரோயின் ஆலியா பட், கதையை எழுதிய ஹூசைன் ஜைதி ஆகியோர் மீது இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். பாபுஜியின் வழக்கறிஞர் கூறும்போது, ஹூசைன் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகள் ஜக்குபாய் பற்றி அவதூறாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
Recommended Video
சிட்டி சிவில் கோர்ட்
அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் அந்தப் புத்தகத்தில் ஜக்குபாயின் அத்தியாயத்தை நீக்க வேண்டும் என்றும் அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மும்பை சிட்டி சிவில் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், இந்த புகாருக்கு ஜனவரி 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.