பிக் பாஸ் உங்க சாயம் வெளுத்துருச்சு: கஞ்சா கருப்பு எல்லாத்தையும் உளறிட்டாரு
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய முக்கிய விஷயத்தை கஞ்சா கருப்பு உளறிவிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் நடப்பது எல்லாம் ஸ்கிரிப்ட் படி தான் நடக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் சொல்கிறபடியே அனைவரும் நடிக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்பு உண்மையை உளறிவிட்டார்.

கஞ்சா கருப்பு
பிக் பாஸ் வீட்டில் எல்லாமே ஸ்கிரிப்ட் படி தான் நடக்கிறது. அனைவருமே நடிக்கிறார்கள் என்று எப்.எம். ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கஞ்சா கருப்பு உளறிவிட்டார்.

கெட்டது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெட்ட விஷயங்களையே காட்டுறாங்க ஐயா. நல்ல விஷயங்களை காட்டினால் நன்றாக இருக்குமே ஐயா என்று எக்ஸ்ட்ரா ஒரு பிட்டையும் போட்டுள்ளார் கஞ்சா கருப்பு.

பரணி
படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த பரணியும், கஞ்சா கருப்பும் பிக் பாஸ் வீட்டில் எதிரிகளாக இருந்தனர். பரணியை கஞ்சா கருப்பு அந்த பாடுபடுத்தியது எல்லாம் ஸ்கிரிப்ட்படி தானாம்.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் எல்லாம் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். கஞ்சா கருப்பை மட்டும் தனி அறையில் தங்க வைத்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அப்படி இருந்தும் அவர் உளறிவிட்டாரே.


Click it and Unblock the Notifications











