Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சினிமா எடுப்பதாகக் கூறி சொத்துக்களை ஆட்டயப் போட்ட இயக்குநர்... கஞ்சா கருப்பு போலீசில் புகார்
சிவகங்கை: சினிமா எடுப்பதாகக் கூறி தன் சொத்துக்களை அபகரித்த இயக்குநர் கோபியிடமிருந்து அவற்றை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரையைச் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், "கடந்த ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் இயக்குநராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது.
இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் ஆகிய 2 பேரும் பணத்திற்காக என்னுடனும், என் மனைவி சங்கீதா, மைத்துனர் சந்தோஷ்குமார் ஆகியோருடனும் பேசினர். அதன்பின்னர் எங்களுக்கு சொந்தமான சிவகங்கையை அடுத்த கட்டாணிபட்டியில் உள்ள இடத்தையும், மதகுபட்டி, மேலூரில் உள்ள 6 சொத்துக்களையும் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றனர்.
அந்த பணத்தைக் கொண்டு படத்தை எடுத்து முடித்தனர். அவர்கள் சொத்துக்களை எங்களிடம் இருந்து பெறும்போது என் மனைவி சங்கீதாவிடம் படம் வெளியானவுடன் பணத்தை கொடுத்து சொத்துக்களை மீட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுத்திருந்தனர்.
ஆனால் படம் வெளியான பின்னர் பேசியபடி அவர்கள் சொத்துக்களை மீட்டுத் தரவில்லை. தற்போது என்னுடைய சொத்துக்களை காளையப்பன், கோபி ஆகியோர் வாங்கி வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றனர். எனவே அவற்றை மீட்டுத் தர வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு டிஎஸ்பி தலையிலான படை இந்த புகாரை விசாரிக்கவிருக்கிறது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!