Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமா எடுப்பதாகக் கூறி சொத்துக்களை ஆட்டயப் போட்ட இயக்குநர்... கஞ்சா கருப்பு போலீசில் புகார்
சிவகங்கை: சினிமா எடுப்பதாகக் கூறி தன் சொத்துக்களை அபகரித்த இயக்குநர் கோபியிடமிருந்து அவற்றை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரையைச் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், "கடந்த ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் இயக்குநராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது.
இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் ஆகிய 2 பேரும் பணத்திற்காக என்னுடனும், என் மனைவி சங்கீதா, மைத்துனர் சந்தோஷ்குமார் ஆகியோருடனும் பேசினர். அதன்பின்னர் எங்களுக்கு சொந்தமான சிவகங்கையை அடுத்த கட்டாணிபட்டியில் உள்ள இடத்தையும், மதகுபட்டி, மேலூரில் உள்ள 6 சொத்துக்களையும் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றனர்.
அந்த பணத்தைக் கொண்டு படத்தை எடுத்து முடித்தனர். அவர்கள் சொத்துக்களை எங்களிடம் இருந்து பெறும்போது என் மனைவி சங்கீதாவிடம் படம் வெளியானவுடன் பணத்தை கொடுத்து சொத்துக்களை மீட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுத்திருந்தனர்.
ஆனால் படம் வெளியான பின்னர் பேசியபடி அவர்கள் சொத்துக்களை மீட்டுத் தரவில்லை. தற்போது என்னுடைய சொத்துக்களை காளையப்பன், கோபி ஆகியோர் வாங்கி வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றனர். எனவே அவற்றை மீட்டுத் தர வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு டிஎஸ்பி தலையிலான படை இந்த புகாரை விசாரிக்கவிருக்கிறது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!