Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக் பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஞ்சா கருப்பு: இப்படியுமா செய்றாங்க!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்பு அளித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பரணியுடன் வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருந்தார் அவர்.
பேட்டி
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கஞ்சா கருப்பை பேட்டி எடுக்க நினைத்து பிரபல பத்திரிகை ஒன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது. அப்போது அவர் அளித்த பதில் தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கஞ்சா கருப்பு
அண்ணே என்னால பேட்டி எல்லாம் கொடுக்க முடியாதுண்ணே. 100 நாள் வரைக்கும் யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று கறாராக சொல்லயிருக்கிறார்கள் என்றாராம் கஞ்சா கருப்பு.
வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை என் வீட்டிற்கு செல்லக் கூடாது என்று கூறியுள்ளார்கள். அவர் கொடுத்துள்ள ரூமில் தான் தங்கணும். நிகழ்ச்சி முடிந்த பிறகே என் வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லியுள்ளனர் என்று கஞ்சா கருப்பு தெரிவித்தாராம்.
ரகசியம்
கஞ்சா கருப்பு அளித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டு குட்டு உடைந்துவிடும் என்பதால் போட்டியாளர்களை இப்படி பாதுகாக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.