Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஜபி 2... ரஜினி மகள் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாகிறார் கௌதமி மகள்...?
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள வேலையில்லாப் பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகை கௌதமி மகள் சுப்புலட்சுமி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
சென்னை: வேலையில்லாப் பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீசாகி பெரும் வசூலைக் குவித்தது இப்படம்.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்திலும் தனுஷே நாயகனாக நடிக்கிறார்.
ஆனால், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த அமலாபால், இப்படத்தில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு பதில் பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் முதலில் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தற்போது இப்படத்தில் தனுஷின் ஜோடியாக நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனுஷை சந்தித்து கௌதமி பேசியதாகவும் கூறப்படுகிறது.
சமீபகாலமாக தன் அம்மா கௌதமியுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் சுப்புலட்சுமி. எனவே, விரைவில் அவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.