Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஒருவழியாக செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா'
சென்னை: அச்சம் என்பது மடமையடா படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸாகும் என்று இயக்குனர் கவுதம் மேனன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
கவுதம் மேனன் தயாரித்து இயக்கியுள்ள படம் அச்சம் என்பது மடமையடா. சிம்பு, மஞ்சிமா மோகன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.
கபாலி
அச்சம் என்பது மடமையடா கடந்த ஜூலை மாதமே ரிலீஸாவதாக இருந்தது. பின்னர் ரஜினியின் கபாலி ரிலீஸால் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகும் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
சிம்பு
சிம்பு படப்பிடிப்பில் ஒத்துழைக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவது இல்லை என்று புகார்கள் எழுந்தன. இதனால் படப்பிடிப்பை முறையாக நடத்தி முடிக்க முடியாமல் கவுதம் திணறியதாக கூறப்பட்டது.
ஆகஸ்ட்
இப்படி அச்சம் என்பது மடமையடா படம் எப்பொழுது தான் ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கவுதம் அறிவித்தார். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போனது.
|
செப்டம்பர் 9
கவுதம் ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது, அச்சம் என்பது மடமையடா இன்றில் இருந்து ஒரு மாதத்தில் ரிலீஸாகும். அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அறிவிக்க காத்திருந்தோம். தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. நல்ல தேதி. IX என தெரிவித்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா
முன்னதாக கவுதம் மேனன், சிம்பு கூட்டணியில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தால் சிம்புவின் காதலியாக நடித்த த்ரிஷாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.