Don't Miss!
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
எழில் இயக்கத்தில்.. மர்டர் மிஸ்டரியில் இணையும் பார்த்திபன், கவுதம் கார்த்திக்.. செம த்ரில்லராமே!
சென்னை: பார்த்திபனும் நடிகர் கவுதம் கார்த்திக்கும் க்ரைம் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை எழில் இயக்குகிறார். ராஜேஷ்குமாரின் நாவலை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாகிறது.
காவ்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் டி.விஜய்குமரன் தயாரிக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கும் பிரம்மாண்ட படம்.. நடிகர் சூர்யா ஜோடியாகிறாரா கார்த்தி ஹீரோயின்.? கோலிவுட் தகவல்!
முருகேஷ்பாபு வசனம்
இந்தப் படத்தில், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சி. முருகேஷ்பாபு வசனம் எழுதுகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தற்காலிகமாக புரடக்ஷன் நம்பர் 2 என்று வைத்துள்ளனர்.
மர்டர் மிஸ்டரி
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 19-ம் தேதி தொடங்கியது. இயக்குனர் எழில் கூறும்போது, சமீப காலமாக காமெடி படங்களை இயக்கி இருக்கிறேன். இது திரில்லர் படம். மர்டர் மிஸ்டரி கதை. கவுதம் கார்த்திக் தனியார் டிடெக்டிவாகவும் பார்த்திபன் போலீஸாகவும் நடிக்கின்றனர்.
காமெடி கலக்கல்
அனைத்து கமர்சியல் அம்சங்களும் கொண்ட த்ரில்லராக இருக்கும். ராஜேஷ்குமார் நாவலின் தாக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது. அது எந்த நாவல் என்பது இப்போது வேண்டாம்' என்றார். தயாரிப்பாளர் டி. விஜய்குமரன் கூறுகையில்,
படத்தின் நட்சத்திர நடிகர்கள் குழுவே படம் காமெடி கலக்கலாக இருக்கக் காரணமாக இருக்கும் என்பதை அடித்து கூறுவதாக தெரிவித்தார்.
கமர்ஷியல் சினிமா
இயக்குநர் எழில் கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் தருவதில் வல்லவர். சிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையை முதன்முறையாக க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தப் படத்தை இயக்குகிறார். இதனால் தயாரிப்பாளராக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண்டிப்பாக கவரும்
தமிழ் சினிமாவில் தங்கள் தனித்திறமையால் போற்றப்படும் நடிகர்களான பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பது, ரசிகர்களை கண்டிப்பாக கவரும். அவர்களின் பலம் படத்தை பெரிய வெற்றி பெறச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.