Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கவுதம் கார்த்திக்கிற்கு வெட்கம், மானம், சூடு, சொரணையே கிடையாது: இயக்குனர்
Recommended Video
சென்னை: கவுதம் கார்த்திக் எப்படிப்பட்டவர் என்று இயக்குனர் ஆறுமுக குமார் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோரை வைத்து ஆறுமுக குமார் எடுத்துள்ள படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். படம் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய ஆறுமுக குமார் கூறியதாவது,
விஜய் சேதுபதி
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஒரு சூப்பர் காமெடி படம். நானும், விஜய் சேதுபதியும் சந்தித்து பழகியது குறித்து அவர் கூறினார். நான் அதே மாதிரி பழகுவது பெரிய விஷயம் அல்ல. அவர் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவருடைய பழக்கம் பழையபடியே இருப்பது பிரமிப்பாக உள்ளது.
கதாபாத்திரம்
இந்த கதாபாத்திரம் கவுதம் கார்த்திக்கிற்காகவே உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இந்த படத்தில் கவுதம் நடித்த பிறகு இந்த படத்தின் கதையை வேறு யாரை வைத்தும் என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
டீசன்ட்
கவுதம் தத்ரூபமாக இருந்துள்ளார். கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத கதாபாத்திரம் கவுதமுடையது. மேடையில் அவர் டீசன்டாக இருப்பார். ஆனால் நார்மலாகவே அவர் ஜாலியாக இந்த மாதிரி எதுவுமே இல்லாமல் தான் இருப்பார்.
பேசப்படும்
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியின் சுமார் மூஞ்சி குமாரு பேசப்பட்டது போன்று கவுதம் கார்த்திக்கின் இந்த கதாபாத்திரம் பேசப்படும். கவுதம் செமயாக நடித்துள்ளார் என்றார் ஆறுமுக குமார்.