Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதல் முறிவிற்குப் பின் மீண்டும் இணையும் கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த்
சென்னை: வை ராஜா வை படத்தைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் -பிரியா ஆனந்த் ஜோடி மீண்டும் ஒருமுறை முத்துராமலிங்கம் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறது.
கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ, வை ராஜா வை போன்ற படங்களும் கடல் படத்தைப் போன்றே பெரியளவில் எடுபடவில்லை.
இந்நிலையில் தற்போது முத்துராமலிங்கம் என்ற புதிய படத்தில் நாயகனாக கவுதம் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.
வை ராஜா வை படத்தில் நடிக்கும் போது கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு டேட்டிங் சென்றதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும் பல்வேறு வதந்திகள் வெளியாகின.
ஒரு கட்டத்தில் இருவரின் காதலும் முடிவிற்கு வந்ததாகவும் இதனால் பிரியா ஆனந்த் அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்று விட்டதாகவும் கூட கூறினர்.ஆனால் இது குறித்து இருவரும் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.
இந்நிலையில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லாத பிரியா ஆனந்த் மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து முத்துராமலிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது தமிழ் சினிமாவில் பலரின் புருவத்தையும் உயர்த்தச் செய்திருக்கிறது.
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்துடன் இணைந்து பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
இளையராஜாவின் 1001 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார்.
இந்தப் படத்தின் மூலம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன், பஞ்சு அருணாசலம் கைகோர்ப்பது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க