Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் !
சென்னை : ஜனரஞ்சகமான குடும்ப திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே எப்போதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் 2009ஆம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் தற்பொழுது உருவாக உள்ளது.
இதில் பிரபல இளம் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக கசிந்த தகவலை அடுத்து இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
திரைப்படங்களில் மட்டுமே
இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டுக்குடும்பம் என்பதே இல்லை, தனித்தனி குடும்பங்களாக அனைவரும் வாழ்ந்து வரும் நிலையில் திரைப்படங்களில் மட்டுமே அது போல மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தை காண வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மாயாண்டி குடும்பத்தார்
நிஜத்தில் பார்க்க முடியாத அல்லது அரிதாக இருக்கக்கூடிய கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு தமிழில் அவ்வப்போது வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வரும் நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
சென்டிமெண்ட் காட்சிகள்
தருண்கோபி, சீமான், மணிவண்ணன், பொன்வண்ணன், சிங்கம் புலி, ரவி மரியா என பல பிரபலமான நடிகர்கள் இதில் நடித்திருக்க சென்டிமெண்ட் காட்சிகள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு பார்ப்பவர்கள் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் தாரை தாரையாக வரவழைத்தது.
இயக்குனர் நந்தா பெரியசாமி
அண்ணன்கள் தம்பிகள் பாசத்தை தமிழ் மண் மாறாமல் கூறிய மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் பாகம் 2 இப்பொழுது உருவாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை ஆர்யா நடித்த "ஒரு கல்லூரியின் கதை" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கவுள்ளார்.
கௌதம் கார்த்திக் ஹீரோ
இயக்குனர் நந்தா பெரியசாமி ஏற்கனவே மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வரும் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்த நிலையில் மாயாண்டி குடும்பத்தார் பாகம் இரண்டில் கதாநாயகனாக பிரபல இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இதைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இதர நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.