Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
கவுதம் மேனன் - அஜீத் கூட்டணியில் என்னை அறிந்தால் 2.. விரைவில்!
சென்னை: என்னை அறிந்தால் படத்தின் 2 வது பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் என்னை அறிந்தால். அஜீத், த்ரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் நடித்திருந்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற படங்களின் 2 வது பாகத்தை எடுக்க அனைவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கவுதம் மேனனும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார்.
சமீபத்தில் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் என்னை அறிந்தால் படத்தின் 2 வது பாகத்தை விரைவில் எடுப்பேன் என்று உறுதி தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் கதை பாதி முடிந்த நிலையில் முழுக்கதையையும் எழுதி முடித்து விட்டு அஜீத்தை சந்திக்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.
கவுதம் மேனன் தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது கனவுப் படமான துருவ நட்சத்திரத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார்.
மேலே சொன்ன 2 படங்களையும் முடித்து விட்டு என்னை அறிந்தால் படத்தின் 2 வது பாகத்தினை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.