மம்முட்டியுடன் இணையும் கெளதம் மேனன்... தாய் மொழிக்கு திரும்பினார்!

கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் கெளதம் மேனன் தமிழில் மின்னலே தொடங்கி நீதானே என் பொன் வசந்தம் வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தெலுங்கு, இந்தியிலும் அவரது படங்களை ரீமேக் செய்வார் கவுதம் மேனன். ஆனால் மலையாளத் திரை உலகின் பக்கம் திரும்பி கூட பார்த்ததில்லை.
முதன் முறையாக மம்முட்டியை வைத்து படம் இயக்கப் போகிறாராம். அதற்கான கதை, ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி செய்துவிட்டாராம். மம்முட்டி படத்திற்குப் பின்னர் பாசில் மகனை வைத்து மற்றொரு மலையாளப் படம் இயக்கப் போகிறாராம்.
இப்போது சூர்யா உடன் துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக உள்ள கெளதம் மேனன் 2014ம் ஆண்டில் இருந்து மம்முட்டி படத்தை இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments


Click it and Unblock the Notifications