Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெந்து தணிந்தது காடு 2 வருமா? இசைவெளியீட்டுவிழாவில் கௌதம் மேனன் சொன்ன சூப்பர் தகவல்!
சென்னை : வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருந்தே வெந்து தணிந்தது காடு பார்ட் 2 வரும் என ஆடியோ வெளியீட்டு விழாவில் கௌதம் மேனன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கூட்டணியான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் வெற்றிப்பயணத்தில் மூன்றாவது படமாக தயாராகியிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.
“வெந்து தணிந்தது காடு“ இசை விழாவுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு.. மிரண்டு போன கோலிவுட்!
21 வயது இளைஞன் போல
இந்நிலையில் இந்த இசைவெளியீட்டு விழாவில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு உடலை குறைத்து 21 வயது இளைஞனாக மாறி உள்ளார். இந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். இந்த படத்தில் இன்டர்வல் ப்ளாகில் சிங்கிள் ஷாட் ஃபைட் இருக்கு அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது என்றார்.
சுவாரசியத்திற்காக
மேலும், பேசிய கௌதம் மேனன், ஜெயமோகன் எழுதிய கதையில் காதல் ஒரு மேலோட்டமாக சொல்லி இருப்பார். இதனால், சுவாரசியத்திற்காக ஒரு ஸ்பெஷல் ஸ்பேசை உருவாக்கி காதல் காட்சிகளை இதில் சேர்த்துள்ளோம். இதற்காக ஜெயமோகனிடம் அணுகியபோது அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகப்பட்டு வருகிறது.
வெந்து தணிந்தது காடு 2 வரும்?
இந்த கதையை இரண்டரை மணிநேரத்தில்சொல்லிவிட முடியாது, ஒரு முடிவல்ல... இது தொடரும் ..ரசிகர்கர் இந்த படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து பார்ட் 2 வரும் என்றார் இயக்குநர் கௌதம் மேனனன். இயக்குநரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஏகத்திற்கும் மகிழ்ச்சி அடைந்தனர். சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனியின் படத்தொகுப்பு என அனைவரும் கடுமையாக உழைத்து இருப்பதாக கௌதம் மேனன் பேசினார்.
பிரம்மாண்ட விழா
பிரம்மாண்டமாக இசைவெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசைவெளியீட்டுவிழாவில், சிம்பு,கௌதம்மேனன், ஏ.ஆர் ரஹ்மான், சிறப்பு விருந்தினராக உலகநாயகன் கமலஹாசன்,உதயநிதி ஸ்டாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.