Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அஞ்சலியை வைத்து பேய் படம் எடுத்த தெலுங்கு இயக்குனர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி என்ற பேய் படத்தை எடுத்துள்ள தெலுங்கு இயக்குனர் ராஜ் கிரணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்தி பிரச்சனையை அடுத்து ஆந்திராவில் செட்டிலான அஞ்சலி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் ராஜ் கிரண் என்பவர் அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி என்ற ஹாரர் காமெடி படத்தை எடுத்துள்ளார். படத்தில் அஞ்சலி தான் கீதாஞ்சலி.
கீதாஞ்சலி படத்தை வரும் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதுவரை சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை. இதை நினைத்து கவலைப்பட்ட ராஜ் கிரணக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த படத்தை எம்.வி.வி. சத்யநாராயணா தயாரிக்க திரைக்கதை எழுதியுள்ளார் கோனா வெங்கட். படத்தில் ஹர்ஷ்வர்தன் ரானே, பிரம்மானந்தம், ஸ்ரீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அஞ்சலி சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் கோலிவுட் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.