twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெனிலியாவுக்கு ‘நவ்ரா’ அனுப்பிய முதலும், கடைசியுமான ‘தந்தி’...

    |

    Genelia received first, last telegram from Riteish
    மும்பை: பாலிவுட்டில் தற்போது ஜெனிலியா மற்றும் அவரது காதல் கணவர் ரித்திஷ் தேஷ்முக்கின் காதல் மிகவும் பிரபலம். எதையாவது வித்தியாசமாக செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிக்க நினைத்த ரித்திஷ்க்கு ஞாபகத்தில் வந்தது 'தந்தி'.

    கடந்த மாதம் 15ம் தேதி தனது 160 வருடக் காலச்சேவையை நிறுத்திக் கொண்டது தந்தி. கடைசி தினமான அன்று நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் தந்தி ஒன்றை அனுப்பினாராம்.

    கடந்த 2003ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து நடித்த போது, ஜெனிலியாவிற்கும் ரித்திதிற்கும் காதல் பூத்தது என வதந்திகள் பரவின. முதலில் இதை மறுத்த அவர்கள், பின்னர் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுவரை ஒரு தந்தி கூட ஜெனியாவிற்கு வந்ததில்லையாம். எனவே, கணவர் அனுப்பிய முதலும் கடைசியுமான தந்தியை ட்வீட்டரில் படமெடுத்துப் போட்டுள்ளார் ஜெனிலியா. மேலும், அதில் ஜெனிலியா தெரிவித்திருப்பதாவது...

    எனது முதலும்,கடைசியுமான தந்தியை எனக்கு அனுப்பியது எனது நவ்ரா தான். தேங்யூ ரித்திஷ்... நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்...' எனத் தெரிவித்துள்ளார் ஜெனிலியா.

    நவ்ரா என்றால் மராத்தியில் கணவர் என்று பொருளாம்.

    English summary
    Actress Genelia D'Souza and her actor husband Riteish Deshmukh's love story is as Bollywood as it can get - the "Masti" star made sure he sent a telegram to his wife on the day that the 160-year-old service came to an end.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X