வாக்குறுதியை நிறைவேற்றிய கேப்டன்.. பிக்பாஸ் வீட்டில் அதிரடி மாற்றம்.. குதூகலிக்கும் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெட் ரூம் மற்றும் பாத் ரூம் திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போதே பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பாத்ரூம் மற்றும் டாய்லெட்ஸ் மூடப்பட்டிருந்தது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் நான்கு கேஸ் ஸ்டவுகள் இருந்த போதும் இரண்டு ஸ்டவுகளுக்கு மட்டுமே பர்னர் கொடுக்கப்பட்டிருந்தது.

பெட் ரூம் திறக்கவில்லை
பிக்பாஸ் வீட்டின் பெண்கள் பெட் ரூம் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் லிவிங் ஏரியா, அங்கு இங்கு என கிடைத்த இடங்களில் எல்லாம் படுத்து உறங்குகின்றனர்.

சுரேஷ் கேப்டன்
இதனால் கடந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெண்கள் பெட்ரூமில் படுத்திருந்தார். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக சுரேஷ் சக்கரவர்த்தி பொறுப்பேற்றார்.

கேஸ் ஸ்டவ்
பொறுப்பேற்ற கையோடு பெட் ரூம் மற்றும் பாத் ரூம் ஆகியவற்றை திறக்க வேண்டும் என்றும் கேஸை சிக்கனமாக பயன்படுத்துவோம் ஆகையால் அந்த இரண்டு அடுப்புகளை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆண்கள் பெட் ரூம் திறப்பு
இதனைக் கேட்ட கமல் இதனை உங்களின் வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ளலாமா என்று கேட்டார். நிச்சயமாக சார் என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் ஆண்கள் பெட் ரூம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

செம டிவிஸ்ட்
ஏற்கனவே ஒரு பாத்ரூம் திறக்கப்பட்ட நிலையில் மற்றொரு பாத்ரூமும் திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் இரண்டு பர்னர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை செம டிவிஸ்ட் வைத்து கொடுத்தார் பிக்பாஸ்.

கடைசி நேர டிவிஸ்ட்
அதாவது லக்ஸரி பட்ஜெட்டை அறிவித்து 3200 பாயிண்டுகளுக்கான வேண்டிய பொருட்களை எழுத வைத்து கடைசி நேரத்தில் அந்த பொருட்கள் வேண்டுமா? அல்லது ஆண்கள் பெட் ரூம், பாத் ரூம் மற்றும் பர்னர்கள் வேண்டுமா என டிவிஸ்ட் வைத்து கடைசி நேரத்தில் அனைத்தையும் அழிக்க வைத்தார்.


Click it and Unblock the Notifications











